ஒரு
திட்டங்களின் மூலம்
பல
நோக்கங்களை சென்றடைவதே பல்நோக்குத் திட்டங்கள் ஆகும்.
இவை
ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்களே ஆகும்.
* ஒரு ஆற்றுப்பகுதி முழுவதும் ஒரு
திட்டத்திற்குரிய பரப்பாகவே கருதப்படுகின்றன. இத்திட்டங்கள் நீர்ப்பாசனம், நீர்
வளம்,
வெள்ளத் தடுப்பு, தொழில் வளம்,
மண்
அரிப்பு தடுப்பு, காடு
வளர்ப்பு, மீன்
பிடிப்பு, மின்
சக்தி்
போன்ற
பல்வேறு நோக்கங்களுக்காக அமைக்கப்படுகின்றன.
* ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள் நவீன
இந்தியாவின் புதிய
கோயில்கள் என்று
புகழப்பட்டு வருகின்றன. இத்தகைய திட்டங்களின் முதல்
பல்நோக்குத் திட்டமாக
அமைக்கப்பட்ட திட்டம் தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் ஆகும்.
இவை
வெள்ளப்பெருக்கைத் தடுக்கும் திட்டமாகும்.
தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம்
* சோட்டா நாகபுரி பகுதியிலிருந்து மேற்கு
வங்காளம் வரை
பாய்ந்து வருகிறது தாமோதர் நதி.
* தாமோதர் நதி
கோடைக்காலங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான ஏக்கர்
நிலப்பரப்பை வெள்ளத்தில் மூழ்கச் செய்து
வருகின்றன.
* இதனால் தாமோதர் ஆறு
இந்தியாவின் துயரம்
என்று
வர்ணிக்கப்படுகிறது.
* 1948ல் தாமோதர் பள்ளத்தாக்குக் கழகம்
துவங்கப்பட்டது.
* இக்கழகம் சுமார்
ரூ.150
கோடியில் திலாயா,
கோனார்.பாஞ்சத், மைதான்
ஆகிய
நான்கு
இடங்களில் அணைகளைக் கட்டியுள்ளது.
* மேலும் தாமோதர் பள்ளத்தாக்கில் காணப்படும் இரும்பு மற்றும் நிலக்கரி வளத்தையும் பயன்படுத்த ஆலோசித்து வருகின்றன.
* இத்திட்டத்தின் உதவியால் ஜாம்ஷெட்பூர், துர்க்காப்பூர், குல்டி
ஆகிய
இடங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளும் மிகுந்த பயன் பெற்றி
வருகின்றன.
* இத்திட்டத்தின் பயனை
பீகார்
(ஜார்க்கண்ட்) மற்றும் மேற்கு
வங்காளம் இரு
மாநிலங்களும் பெற்று
வருகின்றன. மேலும்
மத்தியப்பிரதேசமும் இதன்
பயனை
பங்கிட்டுக்கொள்கின்றன.
ஹிராகுட் திட்டம்
* இத்திட்டம் மகாநதியின் மீது
1948-ல்
தொடங்கப்பட்டு 1957-ல்
முடிவடைந்தது. இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை
ரூ.83
கோடி.
* இத்திட்டத்தின் கீழ்
மகாநதியின் மாது
ஒரிசாவில் ஒரு
நீண்ட
அணை
கட்டப்பட்டது. அதாவது
4.8 கிமீ
நீளமும், 61 மீட்டர் உயரமும் உடைய
இந்த
அணைக்கட்டுதான் உலகின் மிக
நீண்ட
அணைக்கட்டு ஆகும்.
* இந்த அணை
சுமார்
810 கோடி
கியூபிக் மீட்டர் நீரைத்
தேக்கி
வைக்கும் திறன்
கொண்டது. இத்திட்டத்தின் கீழ்
9 மின்சக்தி நிலையங்கள் கட்டப்பட்டு 270 மெகாவாட் நீர்
மின்
சக்தி
உற்பத்தி செய்யப்படுகிறது.
* திக்காரா மற்றும் நாராஜ்
ஆகிய
அணைகள்
இத்திட்டத்தின் கீழ்
அமைந்துள்ளன. வெள்ளத் தடுப்பு, ஒரிசாவின் இயற்கை
வளப்பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது இத்திட்டமாகும்.
துங்கபத்ரா திட்டம்
* துங்கபத்ரா நதி,
துங்க்
மற்றும் பத்ரா
ஆகிய
இரு
ஆறுகளின் இமைப்பாகும்.
* ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய
இரு
மாநிலங்களின் கூட்டு
முயற்சியே இத்திட்டமாகும்.
* கர்நாடகாவில், பெல்லாரி மாவட்டத்தில் உள்ள
மல்லபுரம் பகுதியில் ஒரு
அணை
கட்டப்பட்டுள்ளது. சுமார்
2.5 கிமீ
நீளமும், 50 மீ
உயரமும் உடையது.
இங்கிருந்து சுமார்
225 கிமீ
நீளத்திற்கு ஒரு
கால்வாயும், 350 மீட்டர் நீளத்திற்கு மற்றொரு கால்வாயும் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
* இத்திட்டத்தின் கீழ்
14 மின்
சக்தி
நிலையங்கள் அமைக்கப்பட்டு 126 மெகாவாட் நீர்மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
பக்ரா நங்கல் திட்டம்
* இந்தியாவின் மிகப்பெரிய பல்நோக்குத் திட்டம் பக்ரா
நங்கல்
திட்டம் ஆகும்.
சிந்துவின் துணையாறாகிய சட்லஜ்
ஆற்றின் குறுக்கே பக்ரா
என்னும் இடத்தில் ஒரு
அணை
கட்டப்பட்டுள்ளது.
* இத்திட்டத்தினால் பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், இராஜஸ்தான் ஆகிய
மாநிலங்கள் பயன்
பெறுகின்றன. இத்திட்டம் நான்கு
முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
* சட்லஜ் ஆற்றின் குறுக்கே, பக்ரா
என்னும் இடத்தில் 226 மீட்டர் உயரத்துடன், 518 மீட்டர் நீளத்துடனும் அணை
கட்டப்பட்டுள்ளது. பக்ரா
உலகின்
உயரமான
அணை
ஆகும்.
* இந்த அணையால் உருவான
மனிதனால் கட்டப்பட்ட, 8 மீட்டர் அகலமும், 80 கிமீ
நீளமும் கொண்ட
மிகப்பெரிய செயற்கை ஏரிக்கு, சீக்கியர்களின் 10-வது
குருவான, குரு
கோவிந்த் சிங்
என்பவரின் நினைவாக கோவிந்த் சாகர்
என்று
பெயரிடப்பட்டுள்ளது. இது
ஹிமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.
* பக்ரா அணைக்குக் கீழாக
13 கிமீ
தொலைவில் நங்கல்
என்னுமிடத்தில் 29 மீட்டர் உயரத்துடன் 305 மீட்டர் நீளத்துடன் கட்டப்பட்டுள்ளது. இதுவும் சட்லஜ்
ஆற்றின் மீதே
அமைந்துள்ளது. இங்கிருந்து நங்கல்
நதிநீர்க்கால்வாய் தொடங்குகிறது.
* சட்லஜ் ஆற்றின் மீது
பக்ரா
நங்கல்
அணைக்குக் கீழாக
13 கிமீ
தொலைவில் நங்கல்
என்னுமிடத்தில் 29 மீட்டர் உயரத்துடன் 305 மீட்டர் நீளத்துடன் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து நங்கல்
நதிநீர்க்கால்வாய் தொடங்குகிறது.
* பக்ராவில் 2 மின்சக்தி நிலையங்கள் கட்டப்பட்டு, அவற்றின் மூலம்
210 மெகாவாட் நீர்
மின்சக்தி பெறப்படுகிறது. மேலும்
நங்கல்
கால்வாய்த் திட்டத்திலும் 2 மின்சக்தி நிலையங்கள் உள்ளன.
* 64 கிமீ நீளமுடைய நங்கல்
கால்வாய் நங்கல்
பகுதியில் அமைந்துள்ளது. பொதுவாக இத்திட்டதினால் 1204 மெகாவாட் மின்சக்தி கிடைக்கிறது. அத்துடன் 1100 கிமீ
நீளத்திற்கு கால்வாய்கள் அமைந்துள்ளன. இத்திட்டத்தினால் 15 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவு நிலம்
நீர்ப்பாசன வசதி
பெறுகிறது.
கோதி திட்டம்
* பீகாரில் உள்ள
கோசி
நதியின் மீது
நேபாளத்தின் உதவியுடன் கோசி
திட்டம் அமைக்கப்பட்டது. வெள்ளத் தடுப்பே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
* கோசி ஆறு
பீகாரின் துயரம்
என்று
வர்ணிக்கப்படுகிறது. இதன்
முக்கிய கால்வாய் ஹனுமான் நகர்
தடுப்பு வரை
செல்கிறது.
* கோசி திட்டத்தால் பயன்
பெறும்
மாநிலம் பீகார்
மற்றும் நேபாளம்.
* இதே போன்று இந்தியாவும், நேபாளமும் இணைந்து செயல்படுத்தி உள்ள
மற்றொரு திட்டம் கண்டக்
திட்டமாகும்.
நாகார்ஜூனா திட்டம்
* ஆந்திரா மாநிலத்தில் கிருஷ்ணா நதி
மீது
அமைந்துள்ள திட்டமாகும். புத்த
துறவியாகிய நாகார்ஜூனரை நினைவுப்படுத்தும் பொருட்டு நாகார்ஜூன சாகர்
என்று
பெயர்
வைக்கப்பட்டுள்ளது.
* இத்திட்டத்தின் கீழ்,
ஆந்திரப்பிரதேசத்தின் நாள்கொண்டா மாவட்டத்தில் ஒரு
அணை
கட்டப்பட்டுள்ளது. இதன்
நீளம்
1.5 கீமி
உயரம்
25 மீட்டர் ஆகும்.
* இத்திட்டத்தின் மூலம்
50 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய வகையில் இரு
நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சம்பல் பள்ளத்தாக்குத் திட்டம்
* மத்தியப்பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் ஆகிய
இரு
மாநிலங்களின் கூட்டு
முயற்சியே இத்திட்டமாகும்.
* யமுனையின் தெற்கு
கிளை
நதியே
சாம்பல்.
* இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் சம்பல்
பகுதியின் மண்
பாதுகாப்பே ஆகும்.
* இத்திட்டத்தின் கீழ்
மத்தியப் பிரதேசத்தின் காந்தி
சாகர்
அணையும், இராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா நீர்த்
தடுப்பு மற்றும் ஜவகர்
சாகர்
அணை,
இராணா
பிரதாப் சாகர்
ஆகிய
மூன்று
அணைகள்
அமைந்துள்ளன.
* இத்திட்டத்தினால் 5 லட்சம்
ஹெக்டேர் நிலப்பரப்பு நீர்ப்பாசனம் பெற்று
வருகிறது.
ரீகண்ட் திட்டம்
* சோன் நதியின் கிளை
நதியான
ரீகண்ட் ஆற்றின் குறுக்கே இத்திட்டம் அமைந்துள்ளன. இந்த
அணையின் நீர்த்தேக்கம் கோவிந்த் வல்லப
பந்த்
சாகர்
என்று
அழைக்கப்படுகிறது.
* இந்த அணை
90 மீ
உயரமும், 1020 மீ நீளமும் கொண்டது.
* இத்திட்டம் நீர்மின்சக்தியை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டது.
* உத்திரப்பிரதேசத்தின் 7 லட்சம்
ஹெக்டேர் நிலப்பரப்பு இத்திட்டத்தினால் நீர்ப்பாசனம் பெற்று
வருகிறது. 6 அலகுகளின் மூலம்
500 மெகாவாட் மின்
உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* இத்திட்டத்தின் மூலம்
பிம்பிரி என்னும் இடத்தில் உள்ள
இரசாயன
தொழிற்சாலைகளும், ரேணுகுட் பகுதியில் உள்ள
அலுமினிய தொழிற்சாலையும், ஊரசர
பகுதியின் சிமெண்ட் தொழிற்சாலையும் மின்
ஆற்றல்
பெறுகின்றன.
இந்திராகாந்தி கால்வாய்த் திட்டம்
* இராஜஸ்தானின் மாநிலத்தின் முக்கிய திட்டமாகும் இந்த
திட்டம்.
* பியாஸ் நதியின் மீது
போங்
அணை
கட்டப்பட்டுள்ளது. பியாஸ்
மற்றும் இராவி
நதிகளில் உள்ள
நீரை
சட்லஜ்
ஆற்றிற்கு திசை
திருப்புவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
* கால்வாய்களி்ன் மூலம்
நீரை
திசை
திருப்பப்படுகிறது. போங்
அணையும் நீரை
திசை
திருப்புகிறது.
* இராஜஸ்தான் கால்வாய் அல்லது
இந்திரகாந்தி கால்வாய் என்று
அழைக்கப்படும் இக்கால்வாய்தான் உலகின்
மிக
நீளமான
நீர்ப்பாசனக் கால்வாய் ஆகும்.
* இராஜஸ்தான் மாநிலத்தின் காந்தி
நகர்,
பிக்கானீர், ஜெய்சல்மீர் போன்ற
பகுதிகளை வளப்படுத்துகிறது.
* இக்கால்வாயின் உதவியால் பியாஸ்,
இராவி
மற்றும் சட்லெஜ் ஆகிய
ஆறுகளின் நீரை
முழுமையாக இந்தியா பயன்படுத்த முடிகிறது.
* ரஷ்யா, கனடா,
சைர்,
அமெரிக்க ஐக்கிய
நாடுகளுக்கு அடுத்து இந்தியா ஐந்தாவது இடத்தில் உலகளவில் நீர்மின்சக்தித் துறையில் இடம்
பெற்றுள்ளது.
* நமது நாட்டின் நீர்மின்சக்தி வளத்தில் 30 சதவீதம் பிரம்மபுத்திரா பகுதிகளில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும்
பல
திட்டங்களும் செயல்பட்டு வருகின்றன.
ஷராவதி திட்டம்
* இவை ஜோக்
நீர்வீழ்ச்சியில் கர்நாடாகா மாநிலம் ஷிமோகா மாவட்டம் ஷராவதி
ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது.
* இந்தியாவின் மிக
உயர்ந்த நீர்வீழ்ச்சி ஜோக்
நீர்வீழ்ச்சி ஆகும்.
891 மெகாவாட் உற்பத்தியுடன், பெங்களூர் பகுதியை வளப்படுத்துகிறது.
* கலினாடி திட்டம் மூலம்
270 மெகாவாட் உற்பத்தி உயர்த்தப்பட்டுள்ளது.
* ஷராவதி திட்டம் மகாத்மா காந்தி
நீர்மின்சக்தித் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
குந்தா திட்டம்
No comments:
Post a Comment